அருவநிலை
இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாக வும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்கு வர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் என வும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்கு வர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண் ணால் பார்க்க முடி யாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞான வடிவம் கொண்டது.