lingam saivasiddhantam natarajar science siva

கோயில்கள் - Temples

சிவாலயங்கள்

ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம். ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும். பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார். அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவாலயங் கள்.

பாடல் பெற்ற சிவத்தலங்கள்

புண்ணிய பாரத பூமியில் எண்ணிறந்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. அவற் றுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றால் சிறப்பு டைய சிவத்தலங்கள் மிகப் பல. அவற்றில் 274 சிவத் தலங்கள் முக்கியமானவையாகப் போற்றப்படுகின் றன. இச்சிவத்தலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தலங்களும் இடம்பெற் றுள்ளன. இவை தாமாகவே முக்கியத் துவம் வாய்ந்தன. புகழ்பெற்ற சைவ சமயக் குர வர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோரால் போற்றிப் பாடப் பெற்றதால் மேலும் பெருமை பெற்று விளங்குகின்றன.

சிவத்தலத் தொகுதிகள்

சிவத்தலங்கள் பலவற்றுள் சிற்சில தலங்கள் ஒவ்வொரு வகைச் சிறப்பு காரணமாகத் தொகுதி களாக வகுக்கப் பெற்றும் போற்றப்பட்டும் வருகின்றன.

தென் கயிலாயத் தலங்கள்: காளத்தி, திருச் சிராப்பள்ளி, திரிகோணமலை என்ற மூன்று தலங்கள்.

பஞ்சபூதத் தலங்கள்: திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் பிருதிவி தலம்; திருவானைக்கா 

அப்புத்தலம்; திருவண்ணாமலை தேயுத்தலம், காளத்தி வாயுத்தலம்; சிதம்பரம் ஆகாயத் தலம்.

பஞ்ச சபைத் தலங்கள்: திருவாலங்காடு ரத்தினசபை; சிதம்பரம் கனகசபை; மதுரை இரஜிதசபை; திருநெல்வேலி தாமிரசபை; திருக்குற்றாலம் சித்திரசபை.

பஞ்ச காட்டுத் தலங்கள்: திருவெண்பாக்கம் இலந்தைக்காடு; திருப்பாசூர் மூங்கிற்காடு; திருவாலங்காடு ஆலங்காடு; திருவெவ்வூர் ஈக்காடு; திருவிற்கோலம் தர்ப்பைக்காடு.

காசிக்கு சமமான தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம்.

மூன்று காயாரோகணத் தலங்கள்: காஞ்சி, குடந்தை, நாகப்பட்டினம்.

மூன்று மயானங்கள்: காஞ்சி, திருக்கடவூர், திருநாவலூர்.

எட்டு வீரட்டான தலங்கள்: சிவபெருமான் அசுரர் முதலியோரைத் தண்டித்த எட்டுத் தலங்கள்.

திருக்கண்டியூர்- பிரம்மாவின் 5-ஆவது தலையைக் கொய்தது;

திருக்கோவலூர்- அந்தகாசுரனைக் கொன்றது;

திருவதிகை- திரிபுரம் எரித்தது;

திருப்பறியலூர்- தக்கன் சிரங்கொய்தது;

திருவிற்குடி- ஜலந்தராசுரனைக் கொன்றது;

வழுவூர்- கஜாசுரனைக் கொன்றது;

திருக்குறுக்கை- காமனை எரித்தது;

திருக்கடவூர்- யமனை உதைத்தது.

ஏழு விடங்கத் தலங்கள்: உளியால் செதுக் கப்படாமல், தான்தோன்றியாக- சுயம்புவாகச் சிவபெருமான் விளங்கும் தலங்கள். இத்தலங் களில் உள்ள உற்சவ மூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி விசேஷம். இம்மூர்த்தம் வீதிவலம் வரும் பொழுது ஒரு தனி நடனமாடிக் கொண்டு வருவர். இவ்வகையாலும் இத்தலங்கள் விசேடம்.

திருவாரூர்: வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு: நகவிடங்கர்- உன்மத்த நடனம்.

நாகைக் காரோணம்: சுந்தர விடங்கர்- பாராகார தரங்க நடனம்.

திருக்காறாயில்: ஆதிவிடங்கர்- குக்குட நடனம்.

திருகோளிலி: அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.

திருவாய்மூர்: நீலவிடங்கர்- கமல நடனம்.

திருமறைக்காடு: புவனி விடங்கர்- அசம்பாத நடனம்.

பாடல் பெற்ற சிறப்போடு அற்புதங்களின் சிகரமாக அமைந்துள்ள சிவத்தலங்களைப் போற்றி வழிப்பட்டு உய்தல் நம்மவரின் கடமை ஆகும்.






bot About Us | Policy | Contact Us | ©2023 Saiva Siddhanta
Back to Top