மகேசுவரமூர்த்திவகை
அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.
சிவசக்தி
சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.
இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.
வ.எண் | மூர்த்திகள் பெயர் | படம் |
---|
Maheshvara Murtam
According to Saiva Sidhdhanha the God is formless (arUpa) . But for the salvation of lives He took the form of liN^gam - meaning symbol (arUpa rUpa).liN^gam< can be considered both as form as well as formless symbol. This mUrti is called sadA shiva mUrti. From the SadhA Shiva mUrti, for the benefit of lives God took a lot of forms which are called mAhEshwara mUrtis. There are twenty five MAhEshwara mUrtis (Some say there are more). Some of these mUrtis are bhOga mUrtis, usually with Shakthi like R^ishabArUdar, or yOga mUrtis, sitting in one of the yOga postures without Shakthi in the side like dakshiNAmUrti, or vEga mUrtis, in the state of destruction like kAlAri. Usually in the temples, SadhA Shiva mUrthi (Shiva liN^gam ) will be in the Sanctum Sanctorum. There are some nice Tamil Verses that praise these mUrtis. The English translation of them and some information is given for that corresponding mUrti name here.
இறைவனுடைய திருமேனிகளை மாகேசுவரமூர்த்திகள் என்பர். இவை இருபத்தைந்து எனவும் கூறுவர்.
இவைபோக சரபமூர்த்தி, திரிபாதமூர்த்தி, பயிரவர் முதலிய பல மூர்த்திகளும் மாகேசுவர மூர்த்திகள் எனப்படுகின்றன.